இலங்கைக்கு மேலும் 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கும் சீனா
இலங்கைக்கு மேலும் 1100 மில்லியன் டொலர் கடன் வழங்க சீனா தீர்மானித்துள்ளது. சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பார்வை’ திட்டத்தின் கீழ் இந்த கடன் வசதி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களில் அந்த கடன் வசதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பார்வை’ திட்டத்தின் இலங்கைக்கான ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்டுள்ள 500 மில்லியன் டொலர் நிதி, கடன் வசதி திட்டமாகவும் மேலும் 600 மில்லியன் Swap எனப்படும் பரிவர்த்தனை திட்டத்தின் கீழும் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply