மீண்டும் இலங்கை வருகிறார் கோட்டா:ஜீ.எல்.பீரிஸ்
பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஓய்வு பெற்ற ஜனாதிபதியின் சிறப்புரிமைகளைப் பெற உள்ளார். அதன்படி, கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்புப் படை, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் அவர் மற்றும் அவரது மனைவிக்கு கிடைக்கும்.
தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபாய ராஜபக்ஷவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply