ஆனந்தகுமாரசாமி முகாமில் கைதான 19 பேரும் நீதிமன்றத்தினுடாக விடுதலை
ஆனந்தகுமாரசாமி முகாமில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின்போது விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட 19 பேரும் ஞாயிறன்று வவுனியா மாவட்ட நீதிபதியின் இல்லத்தி்ல், அவரது முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்றத்தின் ஊடாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர், ஆனந்தகுமாரசாமி முகாமைச் சேர்ந்தவர்கள், இராமநாதன் முகாமுக்குச் சென்றபோது இராணுவத்தினரால் மறிக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட 19 பேருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறி்ப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply