புதிய பாடசாலைத் தவணை இன்றுடன் ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல் கட்டம் இன்று தொடக்கம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறும்.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலும் மூன்றாம் கட்டம் ஏப்ரல 21 ஆம் திகதி முதல் மே மாதம் 09ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply