பலஸ்தீனக் கொடியை உடையாக அணிந்த நெதர்லாந்து எம்.பி
காசாவில் நடந்த இனப்படுகொலையை தனது நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்தர் ஓவர்ஹான்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் பலஸ்தீனக் கொடியை அணிந்து வந்துள்ளார்.
பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், காசா பகுதியில் நடந்துவரும் இனப்படுகொலையை ஒப்புக்கொள்ள மறுக்கும் தனது நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சவால் செய்யவும், நாடாளுமன்றத்தில் பலஸ்தீனக் கொடியை அணிந்திருந்ததாக எஸ்தர் ஓவர்ஹான்ட் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply