வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாளக் குழு 82 பேருக்கு சிவப்பு பிடியாணை
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டு வந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
216 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர்கள்.
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களில் அதிகளவானோர் டுபாயிலேயே இருக்கின்றனர். சிலர் வெளிநாட்டு சிறைகளில் உள்ளனர். இவர்களைக் கொண்டு வருவதற்குரிய இராஜதந்திர நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.
இந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply