99 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேறியது
அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 99 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 19 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.இப்பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் தரப்பினர் வாக்களித்தனர்.
வாக்கெடுப்பு வேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம். பிக்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. அதேநேரம் வாக்கெடுப்பு வேளையில் ஐ. தே. கவின் முன்னணி தலைவர்கள் உட்பட பல எம். பிக்கள் சபையில் இருக்கவில்லை.இப்பிரேரணைக்கு எதிராக தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு எம். பிக்களும், ஐ. தே. கவின் எம். பிக்கள் மூவரும் வாக்களித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply