மன்னார் ஆயருக்கு மிரட்டல்
இலங்கைச் சூழல் குறித்து ஐ நா மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதிய மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், ஊடகங்கள் மற்றும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமைய போன்ற கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவது குறித்து தாம் கவலையடைவதாக கத்தோலிக்க குருமார்கள், அங்கிலிகன் குருமார்கள் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்டோர் ஐ நாவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இலங்கை சூழல் குறித்து மன்னார் ஆயர் மற்றும் வடக்கில் உள்ள 30 கத்தோலிக்க குருமார்கள் சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதினர். இதையடுத்து அவர்கள் மிரட்டப்பட்டதாக நாட்டின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள கிறிஸ்தவ குருமார்களும், பொதுமக்களும் ஐ நா விடம் தற்போது தெரிவித்துள்ளனர்.
வட பகுதியில் இருக்கும் கத்தோலிக்க குருக்கள் மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் நோக்கிலேயே ஐ நாவுக்கு கடிதத்தை தாம் எழுதியதாக அருட்தந்தை டொமினிக் தெரிவித்தார்.
அந்தக் கடிதம் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று தவறாக பொருள் கொள்ளப்பட்டதாகவும் அதனால் சில மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் மன்னார் ஆயர் மிரட்டப்பட்டதாக தமக்கு ஏதும் புகார்கள் வரவில்லை என்று கொழும்பு மறைமாவட்டத்தின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply