அரசாங்கத்தை கலைத்தாவது ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் செயற்படுத்த வேண்டும் என சுதந்திரத்திற்கான அரங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அப்படி இல்லாவிடின் அரசாங்கத்தை கலைத்தாவது பரிந்துரைகளை நிறைவேற்றச் செய்யும் சக்தி ஒன்றை உருவாக்க வேண்டும் என சுதந்திரத்திற்கான அரங்கம் ​தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கையை சுதந்திரத்திற்கான அரங்கத்தின் உறுப்பினர் நிமால்கா பெனாண்டோ முன்வைத்துள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்த்தன மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply