யாழில் சுந்தரமும் மட்டக்களப்பில் சார்ல்ஸும் இன்று பதவியேற்றனர்
யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தனது கடமையை இன்று பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்.மாவட்ட அரச அதிபராக முன்னர் இருந்த திருமதி இமல்டா சுகுமார் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றிருப்பதால் மட்டக்களப்பில் அரச அதிபராக கடமையற்றிய சுந்தரம் அருமைநாயகம் இன்று முதல் யாழ்.மாவட்டத்தின் அரச அதிபராக கடமையைப் பெறுப்பேற்றுள்ளார்.
இவர் பதவியேற்கும் வைபவம் இன்று புதன்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, முன்னாள் வவுனியா அரசாங்க அதிபராக பணியாற்றிய திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ல்ஸ் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு கச்சேரிக்கு விஜயம் செய்த புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக ஊழியர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தில் அமந்துள்ள இந்து ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளையடுத்து சர்வமத சமயத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் கடமையை அவர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply