ஐநா பதவி பிரச்சினை! நவநீதம்பிள்ளை வற்புறுத்தப்பட்டார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அமெரிக்காவும் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு கோரியதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும், இதனை நவநீதம்பிள்ளை மறுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் வேறு உயர் பதவி ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து, இவ்வாறு பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply