ஈரான் ஜனாதிபதிக்கு பான் கீ மூன் கண்டனம்

ஈரான் ஜனாதிபதி மொஹமுட் அஹமடிநிஜாட், இஸ்ரேலுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி தொடர்சியாக இஸ்ரேலுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் இஷ்ரேல் கலைக்கப்பட்டு, பாலஸ்தீனத்துடன் ஒருநாள் இணைக்கபடும் என தெரிவித்திருந்தார்.

அத்துடன் நேற்றைய தினம் தெஹ்ரானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அமெரிக்கரோ, இஸ்ரேலியரோ உளவு பார்க்காத மத்தியகிழக்கு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கள் மேற்கத்தேய நாடுகள் மத்தியிலும், இஸ்ரேலிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே பான் கீ மூன் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

பிராந்திய தலைவர்கள் சர்ச்சைகள் ஏற்படாமல் கருத்து வெளியிட வேண்டுமே தவிர், சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply