சமாதானம் அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது – ஜனாதிபதி

யுத்தத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட சமாதானம் அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மக்களுடனான நேரடி நிகழ்சியின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களையோ, முஸ்லிம்களையோ அல்லது சிங்களவர்களையோ அவர்கள் வாழும் பிரதேசங்களில் இருந்து வெளியேற்ற ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

அதற்கான உரிமை யாருக்கும் இல்லை.

அனைத்து மக்களும் அவர் அவர்களின் சொந்த பிரதேசங்களிலேNயு வாழும் உரிமை இருக்கிறது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சுதந்திரம் அனைவரின் பொருட்டும் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply