கென்ய இன வன்முறைகளில் 11 பேர் பலி
கென்யாவின் தென் கிழக்குப் பகுதியில் இனங்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறைகளால் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயுதமேந்திய சில குழுவினரால், மக்களின் வாழ்விடங்கள் நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கரையோரத்தைச் சேர்ந்த இரண்டு பிரிவினருக்கு இடையில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் காரணமாக கடந்த மாதம் 52 பேர் கொல்லப்பட்டனர்.
பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கென்யாவிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு பிரிவினருக்கும் இடையில் குடிநீர்இ காணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரச்சினைகள் நிலவுவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply