இலங்கையில் மாநாடு நடாத்துவது குறித்து பொதுநலவாய நாடுகள் இன்னும் தீர்மானிக்கவில்லை

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடாத்தப்படுவது குறித்து பொதுநலவாய நாடுகள் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடைபெறும் என கமலேஷ் ஷர்மா உறுதி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை பொதுநலவாய செயலக ஊடகப் பேச்சாளர் ரிச்சாட் உக்கு மறுத்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா 10ம் திகதி இலங்கை செல்வார் என்று மாத்திரமே செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விஜயம் குறித்து பொதுநலவாய நாடுகள் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா, நாளை 13ம் திகதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என ரிச்சாட் உக்கு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply