ஊடகவியலாளர் பரான் சவுகரலிக்கு பிரத்தியேக பாதுகாப்பு வழங்குமாறு நவிபிள்ளை கோரிக்கை

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது கவனத்தை செலுத்தியுள்ளார். இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு இலங்கை அரசாங்கம் பிரத்தியேக பாதுகாப்பு வழங்க வேண்டும் என நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பரான் சவுகரலி கடந்த 15ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார். இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலைமைக் குறித்து விரைவில் தாம் ஒரு விசேட சந்திப்பை ஏற்பாடு செய்யப் போவதாகவும் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply