நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் பொதுமக்களே! குடும்ப ஆட்சியல்ல: பொன்சேகா
நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் பொதுமக்களே ஆவர். ஆனால் இலங்கையை பொறுத்த மட்டில் குடும்ப ஆட்சியொன்றே இடம்பெற்று வருகின்றது. இந்த ஆட்சியால் பயன் ஏற்படப்போவதில்லை என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.பதுளை, ஹாலி எலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் இன்று எதேச்சதிகார செயற்பாடுகளும் ஊழல் மிக்க ஆட்சியுமே நான் எதிர்க்கட்சியிலிருக்க காரணமாகும். தேர்தலின் போது இவ்வாட்சிக்கு எதிராக வாக்களித்த மக்களை விட ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த ஏழை மக்களே சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். நாடு இன்று வங்குரோத்து நிலையினை அடைந்து விட்டது. இது ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் சுகபோ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply