மத முரண்பாட்டு நிலைமைகள் வருத்தமளிக்கிறது – பிரித்தானியா
இலங்கையில் நிலவி வரும் மத முரண்பாடுகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்திய பிரித்தானிய பிரஜையொருவர் நாடு கடத்தப்பட்டார். விருந்தோம்பல் பண்பில் பிரபல்யம் பெற்ற இலங்கையில் தற்போது மத முரண்பாட்டு நிலைமைகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொபீ புலொச் தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கு விஜயம் செய்யும் பிரித்தானியர்கள் குறித்த நாடுகள் பற்றி அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாடுகள் தொடர்பில் பயண விளக்கங்கள் வழங்கப்;பட்டுள்ளதாகவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply