இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை அவசியம் :சீனா

இலங்­கையில் மனித உரி­மை­களை மேம்­ப­டுத்­தவும் பாது­காக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென சீனா கோரிக்கை விடுத்­துள்­ள­து. பொரு­ளா­தார மற்றும் சமூக அபி­வி­ருத்­தி­களில் பல்­வேறு பட்ட நாடு­களில் வித்­தி­யா­சங்கள் காணப்­ப­டு­வதால் மனித உரி­மைகள் பாது­காப்­பிலும் வித்­தி­யா­சங்கள் இருக்­கலாம் என்று சீனாவின் வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் கிங் கேங் தெரி­வித்­துள்ளார்.பீஜிங்கில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாடு ஒன்­றி­லேயே சீனாவின் வெளி­நாட்டு அமைச்சின் பேச்­சாளர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் மனித உரி­மையை பாது­காக்­கவும் ஊக்­கு­விக்­கவும் சம்­பந்­தப்­பட்ட நாடுகள் நட­வ­டிக்­கைகள் எடுப்­பதே முக்­கி­ய­மாகும். உலகின் ஏனைய நாடுகள் அவற்­றுக்கு பயன்­மிக்க உத­வி­களை மட்­டுமே வழங்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

பொது­ந­ல­வாய மாநாட்டில் மனித உரி­மைகள் தொடர்பில் இலங்­கை­யிடம் கேள்வி எழுப்­பப்­பட்­டமை மற்றும் பிரிட்டிஷ் பிர­தமர் டேவிட் கம­ரூனின் கூற்று ஆகி­யவை தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் செய்­தி­யாளர் மாநாட்டில் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.

மேலும், இது பொது­ந­ல­வாய அமைப்­புக்­கு­ரிய விடய மாகும். எனினும், மனித உரிமை விவ­கா­ரத்தில் நாடு­களுக் கிடை­யி­லான கலந்­து­ரை­யா­டல்­களும் தொடர்­பு­களும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் பேரவையின் இவ்வரு டத்திற்கான உறுப்புரிமையை சீனா பெற்றுள்ள நிலையில் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply