இந்தோனேசியாவில் 2 எரிமலைகள் வெடித்தன: விமான பாதைகளில் மாற்றம்

பசபிக்கின் நெருப்பு வளைய பகுதி என்றழைக்கப்படும் இந்தோனேசியா அவ்வப்போது இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நில நடுக்கங்களும், எரிமலை வெடிப்பும் இங்கு அடிக்கடி ஏற்படுகின்றது. 129 எரிமலைகள் உள்ள இந்தோனேசியாவில் நேற்று ஒரே நாளில் 2 எரிமலைகள் வெடித்தன.மத்திய ஜாவாவில் உள்ள மெராபி எரிமலை முதலில் வெடித்தது. அதில் இருந்து புறப்பட்டு வெளியேறிய கரும்புகை சுமார் 2 கிலோ மீட்டர் உயரத்துக்கு எழும்பியது.
எரிமலையின் அடிவாரத்தில் உள்ள பகுதியை சேர்ந்த சுமார் 600 குடும்பங்கள் வெளியேற தயாராகி வருகின்றன.

இதேபோல், வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள சினபங்க் எரிமலையும் நேற்று வெடித்து சிதறியது. அதில் இருந்து புறப்பட்ட கருநிற சாம்பல் 8 கி.மீட்டர் உயரம் வரை எழும்பி சுற்றுப்புற நகரங்களின் மீது படர்ந்தது.

இந்த எரிமலைகளின் வழியாக விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு மெராபி எரிமலை வெடித்த போது 300க்கும் மேற்பட்டவர்கள் பலியானது நினைவிருக்கலாம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply