மீளவும் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு
பிரித்தானியா இலங்கையை ஆக்கிரமித்த வேளை பல்வேறு அட்டூழியங்களை செய்த நிலையில் தற்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய அம்சங்களை முன்னிலைப்படுத்தி மீளவும் இலங்கையை ஆக்கிரமிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.அன்று மொனரவில கெப்பட்டிப்பொல முகங்கொடுத்ததை விட பல்வேறு சவால்களுக்கு தற்பொழுது நமது தேசம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இச் சாவால்களை முறியடிக்க மொனரவில கெப்பட்டிப்பொல கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
செளசிறிபாயவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சி அரசியல் குழு உறுப்பினர் சேனாரட்ன த சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பிரித்தானியாவிடமிருந்து இந்நாட்டைக்காக்க புரட்சிகரமாக செயற்பட்ட மொனரவிலஇ கெப்பட்டிப்பொல தேசத்திற்காக பல்வேறு தியாகங்கள் செய்துள்ள நிலையில் அவர் உன்னதமான வீரபுருஷராவார். மொனரவில கெப்பட்டிப்பொல தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்ட இங்கிலாந்தின் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான ஹென்ரி மார்ஷல் கெப்பட்டிப்பொலவின் தலையை ஆய்வு செய்வதற்காக இங்கிலாந்திற்கு எடுத்து வந்தார்.
இதன்போது ஸ்கொட்லாந்தின் பிரசித்தி பெற்ற வீரரான வில்லியம் வோல்ஸிற்கு சமமானவரே மொனரவில கெப்பட்டிப்பொல என்பதை ஆய்விலிருந்து அறிந்துகொண்டார்.
கி.பி. 1286ஆம் ஆண்டிற்கு பின்பு ஸ்கொட்லாந்தை எட்வட் என்ற மன்னன் ஆக்கிரமித்தவேளை வில்லியம் வோல்ஸ் என்பவரே அம்மன்னனுக்கு எதிராகப் போராடினார். அது போலவே 1818ஆம் ஆண்டு இலங்கையை பிரித்தானியா முழுமையாக கைப்பற்றியவேளை பிரித்தானியாவுடன் இணைந்திருந்து பின்பு நாட்டின் சுதந்திரத்திற்காக போராட முன்வந்தார். அப்போது பிரித்தானியர் அவரை கொடுமையான முறையில் கொலை செய்தனர்.
அன்று மொனரவில கெப்பட்டிப்பொல முகங்கொடுத்ததைவிட பல்வேறு சவால்களுக்கு தற்போது நமது நாடு முகங் கொடுத்துள்ளது. அன்றைய காலப்பகுதியில் சிங்களவர்களை கொடூரமாகக் கொன்று குவித்த பிரித்தானியர் தற்போது இலங்கை மனித உரிமை குறித்து பேசுகின்றனர். இது தொடர்பாக இலங்கைக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கின்றனர்.
இலங்கையினை பிளவுபடுத்தவே பிரித்தானியப் பிரதமர் இவ்வாறு செயற்படுகின்றார்.
அத்துடன் இலங்கையின் மீது பல்வேறு அட்டூழியங்களை இழைத்த பிரித்தானியா யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை மற்றும் ஏனைய சில முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி இலங்கையை மீளவும் ஆக்கிரமிக்க டேவிட் கெமரூன் தலைமையாகக் கொண்டு பிரித்தானியா திட்டமிட்டு செயற்படுகிறது.
பிரித்தானியரினால்தான் இலங்கை மலையகப் பிரதேசங்களில் புகையிரதப் பாதைகள் மற்றும் வீதி ஒழுங்கமைப்புகள் அமைக்கப்பட்டன. அதேவேளை கட்டிடங்களும் நிர்மாணிக்கப்பட்டன போன்ற விடயங்களை முதலாளித்துவ கொள்கைவாதிகள் தெரிவிக்கின்றனர். இது மிகவும் வேடிக்கையாகவுள்ளது.
மொனரவில கெப்பட்டிப்பொல கொள்கைகளை சிறப்பான முறையில் நாங்கள் நடைமுறைப்படுத்துவோமாயின் 2014 மார்ச் மாதம் மேலைத்தேய நாடுகளின் அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட முடியும்.
105 வருடங்களுக்கு பிறகு மொனரவில கெப்பட்டிப்பொலவின் சிரார்த்த தினத்தினைக் கொண்டாடும் இவ்வேளை கெப்பட்டிப்பொலவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதினூடாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து எங்களால் வெற்றி பெற முடியும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply