இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்த வாரம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே, இந்த வாரத்தில் கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் எதிரில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தூதரகத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது, இலங்கைக் காவல்துறையினரின் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்கத் தூதரக ஊடக அதிகாரி ஜூலியானா ஸ்பவான் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகாமையில் மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply