கமெரூன் பிராந்­திய மன்­ன­ருக்கு 100 மனை­வியர் : அவர்­களில் 72 பேர் அவ­ரது தந்­தையின் மனை­வியர்

ஆபி­ரிக்க நாடான கமெ­ரூ­னி­னி­லுள்ள பாபூட் பிராந்­திய மன்­ன­ரான இரண்டாம் அபும்­பிக்கு சுமார் 100 மனை­வியர் உள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. அந்த மனை­வி­யரில் 72 பேர் அவ­ரது தந்­தையின் மனை­வியர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கமெ­ரூனில் பல­தார திரு­ம­ணங்கள் சட்­ட­பூர்­வ­மா­க­வுள்ள நிலையில் பாரம்­ப­ரிய கிரா­மப்­புற பிர­தே­சங்­க­ளி­லுள்ள ஆண்கள் ஒன்­றுக்கு மேற்­பட்ட பெண்­களை திரு­மணம் செய்­வது வழ­மை­யா­க­வுள்­ளது. அங்கு ஒருவர் எத்­தனை திரு­மணம் செய்துகொள்­வது என்­பதில் வரை­யறை கிடை­யாது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.தனது தந்தை 1968 ஆம் ஆண்டு உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து இரண்டாம் அபும்பி பாபூட் பிராந்­திய மன்­ன­ரானார்.

அங்கு மன்னர் ஒருவர் இறக்கும் பட்­சத்தில் புதி­தாக மன்­ன­ராகப் பொறுப்­பேற்­பவர் அவ­ரது மனை­வியர் அனை­வ­ரையும் தனது மனை­வி­ய­ராக பொறுப்­பேற்­பது வழ­மை­யாகும்.
இந்­நி­லையில், தனது தந்­தையின் மர­ணத்­தை­ய­டுத்து ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இரண்டாம் அபும்பி, தனது தந்­தையின் மனை­வி­ய­ரான முன்னாள் மகா­ரா­ணி­களை தனது மனை­வி­ய­ராகப் பொறுப்­பேற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் மொத்தம் 500 பிள்­ளை­க­ளுக்குத் தந்­தை­யானார்.

இது தொடர்பில் இரண்டாம் அபும்­பியின் மூன்­றா­வது மனை­வி­யான கொன்ஸ்ரன்ஸ் மகா­ராணி தெரி­விக்­கையில், மேற்­படி பாரம்­ப­ரிய பல­தார மனை­வியர் நடை­மு­றை­யா­னது வெற்­றி­க­ர­மா­ன­தாக அமைந்­துள்­ள­தாக கூறினார்.

பொது­வாக மகா­ரா­ணிமார் பல மொழிகளில் பேசக் கூடிய வர்களாகவும் கல்விப் புலமை உள்ளவர்களாகவும் இருப்பதால் மன்னருக்கு பெரிதும் அனுசரணை வழங்குபவர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply