ஐ.நா.வின் அறிக்கை, மஹிந்த மீதான அச்சம்: தேர்தலை நடத்த காரணமாம்

ஐக்­கிய நாடு­களின் யுத்­த­க் குற்ற விசா­ரணை அறிக்கை வெளி­யானால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அதனை பயன்­ப­டுத்தி தனது செல்­வாக்கை அதி­க­ரிக்­கலாம் என்­பதால் அதனை தடுப்­ப­தற்­கா­கவே ஆகஸ்டில் தேர்­தலை நடத்த தீர்­மா­னிக்கப்­பட்­ட­தாக அரச வட்­டா­ரங்கள் தெரி­வித்­த­தாக ‘ராய்ட்டர்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதா­வது,

ராஜ­பக்ஷ 2009 இல் விடு­த­லைப்­பு­லி­களை தோற்­க­டித்­ததை தொடர்ந்து அவர் சிங்­கள மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவை பெற்றார்.அவ­ரிற்கு இன்­னமும் அந்த ஆத­ரவு காணப்­ப­டு­கின்­றது.

ஜுலை முதலாம் திகதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது குறித்த அவ­ரது அறி­விப்பை செவி­ம­டுக்க பலர் அவ­ரது சொந்த ஊரில் அணி­தி­ரண்­டி­ருந்­தனர்.

அவர் பிர­ப­ல­மா­னவர் மற்றும் திற­மை­யாக பிரச்­சா­ரத்தை முன்­னெ­டுக்க கூடி­யவர் என்­கிறார் கொழும்பை சேர்ந்த ஆய்­வாளர் குசால் பெரேரா.

ஐக்­கிய நாடு­களின் யுத்த குற்ற விசா­ரணை அறிக்கை செப்­டம்­பரில் வெளி­யா­கி­யுள்­ளது.அந்த அறிக்­கையில் இடம்­பெற்­றுள்ள விட­யங்கள் ஆகஸ்­டி­லேயே கசி­யலாம் என இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு எச்­ச­ரித்­துள்­ளன.

விசா­ரணை அறிக்கை முன்­கூட்­டியே வெளி­யா­கலாம் என்­பதை கருத்­தில்­கொண்டே சிறி­சேன ஆகஸ்ட் 17 இல் தேர்­தலை நடத்த திட்­ட­மிட்டார் என தெரி­வித்­துள்ள அவ­ரிற்கு நெருக்­க­மான வட்­டா­ரங்கள் அதன் மூலம் ரணில்­ விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு சாத­க­மான சூழலை ஏற்­ப­டுத்­தவும், மஹிந்த ராஜ­பக்ஷவின் மீள்­வ­ரு­கையை தடுக்­கவும் அவர் விரும்­பினார் என தெரி­வித்­துள்­ளன.

எவரும் இது குறித்து பகி­ரங்­க­மாக தெரி­விக்­காத போதிலும் ஐக்­கிய நாடுகள் அறிக்­கையே தேர்தல் நடை­பெறும் காலத்தை தீர்­மா­னித்­தது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட அறிக்கை மஹிந்­த­ரா­ஜ­பக்­சவை பலப்­ப­டுத்தும் என அஞ்­சிய மேற்­கு­லக நாடுகள் முன்­கூட்­டியே தேர்­தலை நடத்­து­மாறு கோரி­ய­தாக கொழும்பின் இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

முன்­கூட்­டியே பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நம்­பிக்­கை­யில்லா தீர்மா­னத்­தி­லி­ருந்தும் காப்­பாற்­றி­யது.
இந்­திய. சீனா உற­வுகள் இலங்கை தொடர்ந்தும் இந்­தி­யா­வு­ட­னான உற­வு­களை சீர்­செய்­யுமா அல்­லது ராஜ­பக்­சவின் கீழ் சீனா­வுடன் உற­வு­களை நெருக்­க­மாக்­குமா என்­பதை தேர்தல் முடி­வுகள் தீர்­மா­னிக்கும்,

ராஜ­பக்ச சீனா­வுடன் நெருக்­க­மான உற­வு­களை வளர்த்தார், இந்­தி­யாவை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்­து­ச­முத்­தி­ரத்தில் சீனா வலு­வாக கால்­ப­திக்க உத­வினார்
ராஜ­பக்­சாவின் கீழ் சீனா வீதிகள், துறை­மு­கங்­களை அமைத்­த­துடன், பல மில்­லியன் டொலர் கடன்­க­ளையும் வழங்­கி­யது. தனது நீர்­மூழ்­கி­யையும் கொழும்­பிற்கு அனுப்­பி­யது. இது இந்­தி­யாவை சீற்­றத்­திற்­குள்­ளாக்­கி­யது.

சீனா புதிய அர­சாங்­கத்­துடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளது என உயர் அதி­கா­ரி­யொ­ருவர் குறிப்­பிட்டார்.
ராஜ­பக்ச அடுத்த அர­சாங்­கத்தை அமைத்தால் அவர் இடை­நி­றுத்­தப்­பட்ட அனைத்து திட்­டங்­க­ளையும் மீள ஆரம்­பிப்பார் என முன்னாள் அமைச்சர் டலஸ்­அ­ழ­க­பெ­ரும தெரி­வித்தார். என தெரி­வித்­துள்­ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply