சோமாலியா நாட்டில் ஓட்டலில் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி

Somalia சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிசு நகரில் உள்ள ஓட்டல் ஒன்றின் நுழைவாயில் மீது நேற்று மனித வெடிகுண்டு பயங்கரவாதி ஒருவன், வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தால் மோதினான். அதனால் எழுந்த களேபரத்தை பயன்படுத்தி, ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் சிலர் ஓட்டலுக்குள் புகுந்தனர். அங்கு தங்கி இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில், 2 ஆசாமிகள் பலியானார்கள். இருப்பினும், மற்றவர்கள் அங்கு தங்கி இருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர். 

 

ஓட்டலின் உச்சியில் நின்றபடியும் மர்ம நபர்கள் சிலர், பாதுகாப்பு படையினருடன் சண்டையிட்டனர். கைஎறி குண்டுகளையும் வீசினர். இதில் 5 பேர் பலியானார்கள், 11 பேர் காயம் அடைந்தனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply