கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி ஆபத்தில் முடியும்

சுதந்திரக் கட்­சி­யில் இருந்து அமைச்­சர்­கள் வில­கி­னால் தனிக் கட்சி ஒன்று ஆட்சி அமைக்க நேரி­ட­லாம். அப்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வைத்­தான் பெற வேண்­டி­யேற்­ப­டும்.அப்­படி நடந்­தால் ஏற்­ப­டும் ஆபத்­துக்­க­ளுக்­கு-­ம் பி­ரச்­சி­னை­ க­ளுக்கும் எம்­மால் இல­கு­வில் முகம் கொடுக்­க­மு­டி­யாது. ஆகவே,கூட்டு அர­சு­தான் எல்­லாப் பிரச்­சி­னை­க­ளுக்­கும் ஒரே வழி.

இவ்­வாறு அமைச்­சர் லக்ஸ்­மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்­தார். கூட்டு அர­சைத் தொடர்­வது குறித்து கருத்து வெளி­யிட்ட அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாடா­ளு­மன்­றில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கும் தலா 82 என்ற அடிப்­ப­டை­யில்தான் ஆச­னங்­கள் உள்­ளன. ஆட்சி அமைப்­ப­தற்கு 113 ஆச­னங்­கள் தேவை. கட்­சித் தாவல்­க­ளின் ஊடா­கத்­தான் பூர்த்தி செய்ய முடி­யும்.

ஆனால், முக்­கி­ய­மான பல பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­துக்­கொள்­வ­தற்கு மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை அர­சுக்கு இல்­லா­மல் போய்­வி­டும். இந்த நிலை­மை­யைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே நாம் இரண்டு முதன்­மைக் கட்­சி­க­ளை­யும் இணைத்­துக் கூட்டு அரசை உரு­வாக்­கி­னோம்.

ஆனால், சுதந்­தி­ரக் கட்­சி­யில் இருந்து அமைச்­சர்­கள் வில­கி­னால் தனிக் கட்சி ஒன்று ஆட்சி அமைக்க நேரி­ட­லாம். அப்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வைத்­தான் பெற வேண்­டி­யேற்­ப­டும். அப்­படி நடந்­தால் அது நாட்­டில் எதிர்­ம­றை­யான கருத்­துக்­களைத் தோற்­று­விக்­கும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை இணைத்து ஆட்சி அமைப்­ப­தன்­மூ­லம் ஏற்­ப­டும் ஆபத்­துக்­க­ளுக்­குப் -­பி­ரச்­சி­னை­க­ளுக்கும் எம்­மால் இல­கு­வில் முகம் கொடுக்க முடி­யாது.

அர­சில் இருந்து சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­கள் வில­கு­வ­தன்­மூ­லம் கட்­சியை ஒரு­போ­தும் வளர்க்­க­மு­டி­யாது. கட்­சி­யின் வளர்ச்­சி­யில் அதன் தலை­வர் மைத்­தி­ரிக்கு மாத்­தி­ரம் பங்­கில்லை. மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும் பங்­குண்டு. அவர் இது தொடர்­பில் பொறுப்­பு­டன் செயற்­பட வேண்­டும்.

சுதந்­தி­ரக் கட்சி மகிந்­த­வைத் தவிர்க்க முடி­யாது. அதே­போல்,மகிந்­த­வா­லும் சுதந்­தி­ரக் கட்­சி தவிர்க்க முடி­யாது. அவ­ருக்­குக் கிராம மட்­டத்­தில் மக்­கள் ஆத­ரவு உண்டு.இந்­தச் செல்­வாக்கு கட்­சி­யின் வளர்ச்­சிக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும்.

சந்­தி­ரி­கா­வின் ஆட்­சி­யில் ரணில் விசா­ர­ணைக்­காக நீதி­மன்­றக் கூட்­டில் ஏற்­றப்­பட்­ட­வர். அவ­ரும் சந்­தி­ரி­கா­வும் இப்­போது இணைந்து செயற்­பட முடி­யும் என்­றால் மைத்­தி­ரி­யும் மகிந்­த­வும் ஏன் இணைய முடி­யாது?அர­சி­யல் நிலை­யான எதி­ரி­யும் இல்லை; நண்­ப­னும் இல்லை.என்­றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply