ஜனாதிபதி நாளை அமெரிக்கா பயணம்

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்வதற்கு நாளை (17) அமெரிக்கா செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலக நாடுகளின் பல முக்கிய அரச தலைவர்களைச் சந்தித்துப் பேச உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ், இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி, ஜப்பான் பிர­தமர் சின்­சிரோ அபே, சீன ஜனா­தி­பதி ஷீ ஜின்பின், ஜேர்மன் அதிபர் ஏஞ்­சலா மேர்கல், கன­டாவின் பிர­தமர் டுருடூ உள்­ளிட்ட பலரைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 19 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை பொதுச் சபையில் உரை­யாற்­ற­வுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply