கட்சியின் தலைமை, செயலாளர் பதவி வேண்டும்- கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி ஒன்றுசேர்வதற்கு சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும், செயலாளர் பதவியையும் கூட்டு எதிர்க் கட்சிக்கு வழங்க வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியில் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் இருவருக்கு குறித்த பதவிகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply