தமிழ்ப் போராளிச் சந்தேகநபர்கள் மீதான சித்திரவதைக் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்

தமிழ்ப் போரா­ளிச் சந்­தே­க­ந­பர்­கள் மீது சித்­தி­ர­வ­தை­கள் மற்­றும் பாலி­யல் வல்­லு­ற­வு­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டும் குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­துள்ளார் பாது­காப்­புச் செய­லர் கபில வைத்­தி­ய­ரத்ன. இது ஐரோப்­பா­வில் அர­சி­யல்த் தஞ்­சம் கோரு­வ­தற்­காகக் கூறப்­பட்ட குற்­றச்­சாட்டு என்றும் தெரி­வித்­துள்­ளார். தற்­போ­தைய ஆட்­சிக் காலத்­தில், கைது செய்­யப்­பட்ட 50இற்­கும் அதி­க­மா­னோர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­னர் எனவும், பாலி­யல் ரீதி­யான வதை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டனர் எனவும், அண் மை­யில் ஏபி செய்தி நிறு­வ­னம் ஆய்வு அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தது.

இது தொடர்­பில் பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ரி­டம் ஏ.பி. நிறு­வ­னம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தது. அதற்கு அவர் கூறி­யுள்­ளதா­வது:

இந்­தக் குற்­றச்­சாட்­டு­க்கள் அடிப்­ப­டை­யற்­றவை. ஆதா­ர­மற்­றவை. பாலி­யல் மீறல்­கள் மற்­றும் சித்­தி­ர­வ­தை­கள் விட­யத்­தில், அரசு சகிப்­புத்­தன்­மை­யற்ற கொள்­கை­யைக் கடைப்­பி­டிக்­கி­றது.

அரசு எல்­லாக் குற்­றச்­சாட்­டு­க்கள் குறித்­தும் விசா­ரித்­துள்­ளது. மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­கள் முடி­வ­டைந்து, அவை மூடப்­பட்டு விட்­டன.

சில­வே­ளை­க­ளில் நட்­புக்­க­ரங்­க­ளால் கூட இவை நிகழ்­கின்­றன. அவர்­கள் கூறு­வ­தன் அடிப்­ப­டை­யில் மாத்­தி­ரம், குற்­றச்­சாட்­டு­க்களை கருத்­திற் கொள்­ளக் கூடாது.

ஏனை­ய­வர்­க­ளின் கருத்­துக்­க­ளை­யும் அறிய வேண்­டும். இத­னைக் கவ­னத்­திற்கொள்ள வேண்­டும். ஏதே­ னும் குற்­றச்­சாட்­டு­க் கள் இருந்­தால், அரசு சுதந்­தி­ர­மான விசா­ர­ணையை வர­வேற்­கும்.

இந்­தக்குற்­றச்­சாட்­டு­க் க­ளின் அடிப்­ப­டை­யில், இலங்­கைக்­கான உத­வி­கள் குறைக்­கப்­பட வேண்­டும் என்று கோரு­வது, நியா­ய­ மற்­றது. இது ஒரு பகுதி மக்­க­ளு­டன் தொடர்­பு­டைய விட­யம் அல்ல. இது எல்­லோ­ருக்­கு­மா­னது. நிதி உத­வி­கள் ஒரு குறிப்­பிட்ட மக்­கள் குழு­வுக்கு உரி­ய­தல்ல என்­றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply