பிரதமர் ரணில் நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

மத்­திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை  திங்­கட்­கி­ழமை ஆஜ­ராகவுள்ளார். பிரதமரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரி. சித்ரசிறி தெரிவித்துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் மத்திய வங்கி முறி மோசடியில் குற்றம்சாட்டப்படும் சந்தேகநபர் அலோ­சியஸ் உடன் 27 தட­வைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­ன்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply