பிரதமர் ரணில் நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை திங்கட்கிழமை ஆஜராகவுள்ளார். பிரதமரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரி. சித்ரசிறி தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மத்திய வங்கி முறி மோசடியில் குற்றம்சாட்டப்படும் சந்தேகநபர் அலோசியஸ் உடன் 27 தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply