உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு அடுத்த மாதம் 11 ஆம் திகதி ஏற்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதன்படி, அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்பு மனு ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திகதி அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply