பாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று (14) நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து இன்று (15) சபையில் எவரும் பிரதமர் பதவியிலோ, அமைச்சுப் பதவியிலோ இல்லையென சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அத்துடன், இராஜாங்க அமைச்சுப் பதவிகள், சபைத் தலைவர் பதவி, அரசாங்க கட்சி பிரதான அமைப்பாளர் பதவி என்பனவும் இல்லையெனவும், முன்னர் அப்பொறுப்புக்களுக்காக நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் செல்லுபடியற்றதாக மாறுவதாகவும் சபாநாயகர் இன்று (15) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply