UNPயின் மக்கள் பேரணி 10 ஆம் திகதி காலிமுகத்திடலில்

ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் பேரணி எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.இதில் ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வெளிக்காட்டும் சுமார் 3 இலட்சம் மக்களை ஒன்று திரட்டவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் கொழும்பு – காலி முகத்திடலில் பாரிய மக்கள் பேரணி இடம்பெறவுள்ளது. காலி முகத்திடலில் அதிகபட்சம் ஒன்றரை இலட்சம் மக்கள் மாத்திரமே ஒன்றிணைய முடியும். எனினும் எமது பேரணியில் சுமார் 3 இலட்சம் மக்கள் பங்குபற்றவுள்ளனர்.
இதனால், காலி முகத்திடலுடன் அந்த பகுதியிலுள்ள பிரதான வீதியையும் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply