2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு

Thursday, April 24th, 2025 at 6:11 (SLT)

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர் வரை அண்மித்ததுடன் அது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 5.87% வளர்ச்சியாகும்.

மேலும் வாசிக்க >>>

சிந்து நதிநீர் பங்கீடு நிறுத்தம் உள்ளிட்ட 5 முடிவுகள்: பஹல்காம் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி

Thursday, April 24th, 2025 at 6:07 (SLT)

காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் மனிதாபிமானற்ற ரீதியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்

Wednesday, April 23rd, 2025 at 11:11 (SLT)

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் மனிதாபிமானற்ற முறையில் அந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருக்கலாம் : விஜயதாச ராஜபக்ஷ

Wednesday, April 23rd, 2025 at 11:07 (SLT)

இலங்கையிலுள்ள தீவிரவாதிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உடனான நேரடி தொடர்பு குறித்தம் முதல் எச்சரிக்கையை பாராளுமன்றம் ஏன் புறக்கணித்தது என்பதை கண்டறிய முயற்சியினை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் டாக்டர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பிள்ளையான் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் விசாரணை

Wednesday, April 23rd, 2025 at 11:03 (SLT)

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம், அவருக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (22) நடைபெற்றபோது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது : நளிந்த ஜயதிஸ்ஸ

Wednesday, April 23rd, 2025 at 10:59 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சம்மாந்துறையில் மூன்று வயது சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு

Wednesday, April 23rd, 2025 at 10:56 (SLT)

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் வேரோடு சரிந்து வீழ்ந்த பாரிய மரம் :7 வாகனங்களுக்கு சேதம்

Wednesday, April 23rd, 2025 at 10:53 (SLT)

கொழும்பில் இன்று புதன்கிழமை (23) அதிகாலை முதல் பெய்த கடும் மழையினால் பொரள்ளை பகுதியில் பாரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து வீழ்ந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இத்தாலிக்கு பயணமானார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

Wednesday, April 23rd, 2025 at 10:45 (SLT)

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று புதன்கிழமை (23) காலை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

SLPP வேட்பாளராக இருந்த “டான்” கொல்லப்பட்டது எப்படி?

Wednesday, April 23rd, 2025 at 10:33 (SLT)

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான SLPP செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நம்பினால் நம்புங்க காத்தான்குடி நகரை ‘சிங்கப்பூர், மலேசியாவைவிட அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றுவோம். : மு.க முதன்மை வேட்பாளர் அஸ்பர்

Wednesday, April 23rd, 2025 at 10:28 (SLT)

2050ம் ஆண்டில் காத்தான்குடி நகரை ‘சிங்கப்பூர், மலேசியாவைவிட அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றுவோம்..! முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர்

மேலும் வாசிக்க >>>

மகிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது : வி. மணிவண்ணன்

Wednesday, April 23rd, 2025 at 0:43 (SLT)

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசராக தெரிவு செய்யப்படலாம் : சர்வதேச ஊடகங்கள் எதிர்வுகூறல்

Tuesday, April 22nd, 2025 at 11:39 (SLT)

இலங்கையின் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

சூதாட்ட விடுதியில் இளைஞன் கொலை

Tuesday, April 22nd, 2025 at 11:36 (SLT)

புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞனின் மாமாவும் அத்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவு வத்திக்கானுக்கு பதில் தலைவர் நியமனம்

Tuesday, April 22nd, 2025 at 11:33 (SLT)

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக அவரது 88 ஆவது வயதில் திங்கட்கிழமை (21) நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

மேலும் வாசிக்க >>>