பேருந்தும் – வானும் மோதி விபத்து : 12 பேர் படுகாயம்

Monday, February 17th, 2025 at 11:14 (SLT)

கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் உள்ள வெவெதென்ன பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை ஏற்றிச் சென்ற வேனும் மோதியதில் எட்டு இளம் பெண்கள் உட்பட 12 பேர் கந்தகெட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

Monday, February 17th, 2025 at 11:08 (SLT)

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நாட்டின் அடுத்தக்கட்ட அபிவிருத்தி இலக்கியை நிறைவேற்றும் வகையிலான முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன்,அனைத்து தரப்பினரையும் பொருளாதார நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் இம்முறை விசேட அவதானம் செலுத்தப்படவில்லை.

மேலும் வாசிக்க >>>

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Sunday, February 16th, 2025 at 13:10 (SLT)

ஓமானின் மஸ்கற் நகரில் இன்று (16) ஆரம்பமாகவுள்ள 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சானது இந்திய பவுன்டேஷனுடன் இணைந்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பங்கேற்புடன் வருடாந்தம் நடாத்தும் இந்து சமுத்திர மாநாடு இம்முறை ஓமானின் மஸ்கற் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகி, திங்கட்கிழமை (17) வரை நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருளுடன் 16,000 பேர் கைது

Sunday, February 16th, 2025 at 13:07 (SLT)

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 16,000 பேர் கைதாகியுள்ளதாக ஊடகப் பேச்சாளரரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாசிப்பு நாளை

Sunday, February 16th, 2025 at 13:05 (SLT)

புதிய அரசின் முதல் பட்ஜெட், 2025ம் ஆண்டுக்கான அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (17) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை ஆற்ற உள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் : எம்.ஏ.சுமந்திரன் உறுதி

Sunday, February 16th, 2025 at 13:02 (SLT)

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மனைவியுடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர்

Sunday, February 16th, 2025 at 12:54 (SLT)

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஒருவர், அவரது மனைவியுடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (15) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும் : பிரதமர்

Sunday, February 16th, 2025 at 12:52 (SLT)

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் பேணவும் வழிசமைப்போம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கவுள்ள ரணில்?

Sunday, February 16th, 2025 at 12:49 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (22) இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மின்னணு கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

Sunday, February 16th, 2025 at 12:45 (SLT)

மின்னணு கடவுச் சீட்டு (E-Passport) வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பணம் மோசடி

Saturday, February 15th, 2025 at 7:48 (SLT)

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Saturday, February 15th, 2025 at 7:42 (SLT)

முல்லைத்தீவு, முள்ளியவளை முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உடல்களை அடக்கம் செய்ய 17 ஏக்கரை வழங்கிய முஸ்லிம்களுக்கு இழப்பீடோ காணியோ வழங்கப்படவில்லை

Saturday, February 15th, 2025 at 7:33 (SLT)

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்வதை தடுத்து, அவற்றை அடக்கம் செய்வதற்கு காணிகளை வழங்கிய கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அரசாங்கம் எவ்வித நிவாரணத்தையும் வழங்காமையால், அவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை பிரதேச மக்கள் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார் : ரஞ்சித் மத்தும பண்டார

Friday, February 14th, 2025 at 9:35 (SLT)

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேர்மறையான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். ஐ.தே.க. மாத்திரமின்றி சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும். எந்த கூட்டணி அமைக்கப்பட்டாலும் சஜித் பிரேமதாசவே அதன் தலைவராவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்கை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் : சரத் வீரசேகர

Friday, February 14th, 2025 at 9:32 (SLT)

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். போராட்ட காலப்பகுதியிலும் அவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>