ஜேர்மனியில் தொழிற்சங்க பேரணியின் போது அதிர்ச்சி சம்பவம்

Friday, February 14th, 2025 at 0:34 (SLT)

ஜேர்மனியின் மியூனிக் நகரில் ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் ஓட்டிச் சென்ற கார், கூட்டத்திற்குள் புகுந்த சம்பவத்தில் சுமார் 28 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் என மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் 24 வயது ஆப்கானிஸ்தான் புகலிடக்கோரிக்கையாளர் என்றே தெரிய வந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்

Thursday, February 13th, 2025 at 9:32 (SLT)

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற உலக அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், நேற்று மாலை உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா?

Thursday, February 13th, 2025 at 9:27 (SLT)

கடந்த சில நாட்களாக தொடரும் மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா? இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அதன் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா? : ராஜித சேனாரத்ன

Thursday, February 13th, 2025 at 8:54 (SLT)

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். அதனால் தான் நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் குரங்குகள் மீது பழிசுமத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்

Thursday, February 13th, 2025 at 8:49 (SLT)

மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த என்று அறியப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நேற்று இரவு (12.02.2025) அவர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) காவலில் எடுத்துள்ளதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது

Thursday, February 13th, 2025 at 8:45 (SLT)

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், நேற்று (12) இந்தியாவில் தமிழ்நாடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் – தையிட்டி போராட்டத்தில் ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்

Thursday, February 13th, 2025 at 7:31 (SLT)

தையிட்டி காணி அளவீடு செய்யப்படும் நோக்கம் தொடர்பில் எம்மவர்கள் சிலரிடம் காணப்பட்ட புரிதலின்மையைால் தையிட்டி விகாரையை சூழவுள்ள தனியார் காணிகளை கடந்த அரசாங்க காலத்தில் விடுவிக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டங்களூக்கும் கட்சின் பூரண ஓத்துழைப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் குறையும் காற்றின் தரம் : கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து

Wednesday, February 12th, 2025 at 12:59 (SLT)

காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார். மாசுபட்ட காற்றானது கருவின் எடையைக் குறைக்க வழிவகுக்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி : ஆறு பேர் கைது

Wednesday, February 12th, 2025 at 12:55 (SLT)

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு அங்கு சேவையாற்றிய நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா -கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த சமூகப் பிறழ்வான விடுதி ஒன்றை செவ்வாய்க்கிழமை (11) பொலிஸார் முற்றுகையிட்டு அங்கிருந்த நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

139 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

Wednesday, February 12th, 2025 at 12:52 (SLT)

நாடு முழுவதும் 139 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பதில் காவல்துறை மா அதிபரினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.


காங்கேசன்துறை நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

Wednesday, February 12th, 2025 at 12:49 (SLT)

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது. காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த பயணிகள் கப்பல் சேவையானது இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


அர்ச்சுனா எம்.பி. மீது தாக்குதலா?

Wednesday, February 12th, 2025 at 12:45 (SLT)

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தாக்கியதாக கூறி, இருவர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் தான் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

Wednesday, February 12th, 2025 at 12:38 (SLT)

பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தி, பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

மேலும் வாசிக்க >>>

தையிட்டி விகாரை விவகாரம் மல்லாகம் நீதிமன்றம் கஜேந்திரகுமார் எம்.பிக்கு அழைப்பாணை

Wednesday, February 12th, 2025 at 7:58 (SLT)

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றம் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்த போது,

மேலும் வாசிக்க >>>

இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை

Wednesday, February 12th, 2025 at 7:55 (SLT)

இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத் தளங்களில் போலியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>