கொஸ்கொடயில் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது 

Thursday, February 6th, 2025 at 10:29 (SLT)

கொஸ்கொட பொலிஸ் பிரிவின் வதுரவெல பகுதியில் நேற்று புதன்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள், துப்பாகி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆசாத் மௌலானவை இலங்கை அதிகாரிகள் தொடர்புகொண்டுள்ளனர் :அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

Thursday, February 6th, 2025 at 10:26 (SLT)

கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலான சனல்4 தொலைக்காட்சிக்கு தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் விடுதலை விவகாரம் : சட்டமா அதிபர்ஜனாதிபதி இன்று சந்திப்பு

Thursday, February 6th, 2025 at 10:21 (SLT)

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டும் என சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க பரிந்துரை செய்துள்ளமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று ஜனாதிபதி அவரை சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம்

Thursday, February 6th, 2025 at 10:17 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் உப்பின் விலை அதிகரிப்பு

Thursday, February 6th, 2025 at 10:14 (SLT)

இன்று முதல் உப்பின் விலையை அதிகரிக்க அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 400 கிராம் உப்புத்தூள் பக்கட் ஒன்றின் விலை 100 – 120 ரூபாய் வரையிலும், உப்பு துகள் பக்கட் ஒன்றின் விலை 120 – 180 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவிக்கு உயர் பதவி

Thursday, February 6th, 2025 at 10:11 (SLT)

கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க, நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் பதவிக்கு அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல்

Thursday, February 6th, 2025 at 10:07 (SLT)

அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற் களஞ்சியசாலைகளில் இன்று (06) முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மொட்டு சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை

Wednesday, February 5th, 2025 at 13:34 (SLT)

எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது வேறொரு சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நீர் கட்டணமும் குறைக்கப்படும் சாத்தியம்

Wednesday, February 5th, 2025 at 13:31 (SLT)

நீர் கட்டணத்தை 10 தொடக்கம் 30 வீதம் வரையில் குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.மின்சாரக் கட்டண குறைப்புக்கு சார்பாக இவ்வாறு நீர் கட்டண குறைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மற்றுமொரு அதிரடி தீர்மானம் : ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறிய அமெரிக்கா

Wednesday, February 5th, 2025 at 13:27 (SLT)

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பஸ் மிதிபலகையில் பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு

Wednesday, February 5th, 2025 at 13:24 (SLT)

புத்தளம் – திருகோணமலை வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் மிதிபலகையில் நின்றுகொண்டிருந்த நபரொருவர் கீழே தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

Wednesday, February 5th, 2025 at 13:21 (SLT)

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை (5) காலை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்

Wednesday, February 5th, 2025 at 13:18 (SLT)

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 75 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை (05) அதிகாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இராணுவப்படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமனம்

Wednesday, February 5th, 2025 at 13:14 (SLT)

மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க இராணுவப்படைகளின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 9ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

என்னை ஐந்து மாதம் வலுக்கட்டாயமாக தடுத்துவைத்திருந்தனர் என்னுடன் மேலும் பல பெண்கள் பெரும் அவலத்தை எதிர்கொண்டனர் : துபாயிலிருந்து இலங்கைதிரும்பிய குமுதினி எதிரிசிங்க

Wednesday, February 5th, 2025 at 13:02 (SLT)

துபாய்க்கு வேலைக்காக சென்ற தன்னை முகவர் அமைப்பு ஒன்று ஐந்து மாதங்களாக வலுக்கட்டாயமாக தடுத்துவைத்திருந்தது என இலங்கை திரும்பியுள்ள குமுதினி எதிரிசிங்க என்ற பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>