செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

Tuesday, January 28th, 2025 at 9:12 (SLT)

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நாளை புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆவது குழுவைச் சேர்ந்த 29 பெண்கள் 5 ஆண்கள் என 34 செவிலியர் நிபுணர்களுக்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

ஒடுக்குமுறைகளால் பாதிப்புற்ற ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பாதீர் : பிரபல ரோஹிங்கிய அரசியல் செயற்பாட்டாளர்

Tuesday, January 28th, 2025 at 9:08 (SLT)

மியன்மாரில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் உள்ளக மோதல்களில் பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மியன்மாரை சேர்ந்த பிரபல ரோஹிங்கிய அரசியல் செயற்பாட்டாளரும், சுதந்திர ரோஹிங்கியா கூட்டிணைவு எனும் அமைப்பின் ஸ்தாபகருமான நே சான் வின், இலங்கையில் தஞ்சமடைந்த ரோஹிங்கிய அகதிகளை அரசாங்கம் மீண்டும் மியன்மாருக்குத் திருப்பியனுப்பக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரஷ்யாவிலுள்ள இளைஞர்களை மீட்பதற்கு விரைந்து இராஜதந்திர நடவடிக்கை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடம் ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு

Tuesday, January 28th, 2025 at 9:03 (SLT)

பயண முகவர்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று ரஷ்ய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்படுவதற்கு இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடத்தில் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

28 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபை (EDCM) செயல்படுகிறது : ஜனாதிபதி

Tuesday, January 28th, 2025 at 8:46 (SLT)

புதிய அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்வு” கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

மேலும் வாசிக்க >>>

யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி

Monday, January 27th, 2025 at 10:16 (SLT)

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் யோஷித

Monday, January 27th, 2025 at 10:09 (SLT)

பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ இன்று (27) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தரையிறக்கப்பட்ட 3 விமானங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 9 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட்டதாக தகவல்

Monday, January 27th, 2025 at 10:07 (SLT)

எஞ்சின் உதிரி பாகங்கள் இல்லாததால், மூன்று விமானங்கள் தரையிறக்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், மூன்று வருடங்களுக்கான குத்தகைத் தொகையாக ஒரு மாதத்திற்கு 9 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.2.6 பில்லியன்) செலுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு

Monday, January 27th, 2025 at 10:03 (SLT)

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்துக்கு முடியாமல் போகும் போது ரணில் நாட்டை பொறுப்பேற்பார் : வஜிர அபேவர்த்தன

Monday, January 27th, 2025 at 10:00 (SLT)

அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும்போது நாட்டு மக்களே அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் : உதய கம்மன்பில

Monday, January 27th, 2025 at 9:57 (SLT)

போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம். ஆகவே செய்வதை முறையாக செய்யுங்கள் என்று அரசாங்கத்திடமும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடமும் குறிப்பிட்டுக்கொள்கிறோம். சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

காலி சிறைச்சாலை மோதலுக்கு காரணம் பாதாள உலகக் குழு?

Monday, January 27th, 2025 at 9:23 (SLT)

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கடலுக்கு நீராடச் சென்ற உக்ரேனிய பிரஜைக்கு நேர்ந்த பரிதாபம்

Monday, January 27th, 2025 at 9:19 (SLT)

அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச்சென்ற வௌிநாட்டு பிரஜைகள் மூவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் இரு அதிகாரிகளால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு

Monday, January 27th, 2025 at 9:16 (SLT)

நைஜீரியா நாட்டிலுள்ள இனுகு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெட்ரோல் ஏற்றியபடி டேங்கர் லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இனுகு – ஒனிஸ்டா வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிய பாடசாலைத் தவணை இன்றுடன் ஆரம்பம்

Monday, January 27th, 2025 at 9:13 (SLT)

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல் கட்டம் இன்று தொடக்கம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறும்.

மேலும் வாசிக்க >>>

கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Monday, January 27th, 2025 at 9:10 (SLT)

சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு கேரளக் கஞ்சாவையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் வாசிக்க >>>