அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே பாகிஸ்தான் முன்னிலையில் எட்டப்பட்டுள்ள 14 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) “திறக்கப்பட்டுள்ளதாக” ஈரான் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 கப்பல்கள் மட்டுமே இந்தப் பாதையைப் பயன்படுத்த முடியும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. போருக்கு முன்பு நாளொன்றுக்குச் சராசரியாக 140-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணித்த இந்தச் சர்வதேசப் பாதையில், தற்போது வெறும் 10 சதவீத போக்குவரத்தை மட்டுமே அனுமதிப்பது, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>