கொத்மலை அணை உடைந்ததாக பரவும் தகவல் பொய்யானது

Monday, December 1st, 2025 at 7:13 (SLT)

கொத்மலை அணை உடைந்ததாக தற்போது வெளியாகி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என குறித்த நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பிலுள்ள பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவு நாயாறு பாலம் உடைந்தது : போக்குவரத்து முற்றாக பாதிப்பு

Monday, December 1st, 2025 at 7:09 (SLT)

முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளதோடு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Monday, December 1st, 2025 at 7:06 (SLT)

தாழமுக்கமானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 300 கி.மீ வடகிழக்கே வடக்கு அகலாங்கு 12.3°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6°E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இளம்பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

Sunday, November 30th, 2025 at 7:35 (SLT)

இந்தியா கொல்கத்தாவில் இளம்பெண் ஒருவரை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிழக்கு பெருநகர புறவழிச்சாலை அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு (28) வயது இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த போது, அவளை ஒரு கார் மூலம் கடத்தி சென்றுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் இலங்கை வந்தடைவு

Sunday, November 30th, 2025 at 7:30 (SLT)

இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு MI-17V5 ரக  உலங்கு வானூர்திகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. 

மேலும் வாசிக்க >>>

அம்பத்தலை அணை பெருக்கெடுக்கிறது: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

Sunday, November 30th, 2025 at 7:27 (SLT)

களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளமையினால், அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற டித்வா புயல்

Sunday, November 30th, 2025 at 7:23 (SLT)

டித்வா புயலானது நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில்) மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

இதுவரை 123 பேர் உயிரிழந்து, 130 பேர் காணாமல் போயுள்ளனர்

Saturday, November 29th, 2025 at 11:38 (SLT)

நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 


கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை இரணைமடுக்குளத்தில் நீர்மட்டம் வெகுவாக உயர்வு

Saturday, November 29th, 2025 at 8:20 (SLT)

பலத்த மழை காரணமாக, கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், குளத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்த மத்தியஸ்தானம் வேண்டுகோள்

Saturday, November 29th, 2025 at 8:17 (SLT)

அனர்த்த நிலை காரணமாக இரத்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் இரத்த விநியோகம் ஸ்தம்பிதம். இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்தமாற்று சேவை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பெருக்கெடுத்த களனி கங்கை உடன் வெளியேறுங்கள் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Saturday, November 29th, 2025 at 8:10 (SLT)

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கிளென்கோர்ஸில் 21.9 மீட்டரை நீர் மட்டம் தாண்டியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையக்கூடும்

Saturday, November 29th, 2025 at 8:05 (SLT)

“டிட்வா புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில் 4,140 பேர் பாதிப்பு

Saturday, November 29th, 2025 at 8:02 (SLT)

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இளம்பருவத்தினரின் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு : 2024 ஆண்டு 724 ஆண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

Friday, November 28th, 2025 at 13:34 (SLT)

இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான தரவுகளுக்கமைய இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 639 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 824 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் 724 பேர் ஆண்களாவர். அந்தவகையில் 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்வதாக தேசிய பாலியல் பால்வினை நோய்கள் /எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணதிலக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

1.2 பில்லியன் நிதி ஒதுக்கீடு : தேவைக்கேற்ப நிதியை கோருமாறு ஜனாதிபதி பணிப்புரை

Friday, November 28th, 2025 at 13:31 (SLT)

இலங்கையில் பேரிடர் நிவாரண சேவைகளுக்காக ஏற்கனவே ரூ. 1.2 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் தகவல்களின்படி அவசர தேவைகளுக்காக கூடுதலாக, 2025 வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 30 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>