வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது 

January 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

January 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

January 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரலாறு படைக்கும் அதி உச்ச தங்க விலை

January 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வயோதிப தாயை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய இளைய மகன்

January 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இரத்தினபுரியில் பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் இளைய மகனால் கொடூரமாக தாக்கப்பட்டு தாய் காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த தாய் சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

5 புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி

January 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவக் கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாட்டி வதைக்கும் குளிர் 3.5 பாகைக்கு அதிரடியாகச் சரிந்தது நுவரெலியா

January 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்று (22) பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவாகியுள்ளதுடன், அது 3.5 பாகை செல்சியஸாக காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் படி, அண்மைக்காலத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரலாற்றில் இல்லாத அளவில் போதைப்பொருள் வேட்டை

January 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்தது 2025 ஆம் ஆண்டிலேயே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

January 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது.’டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் நோக்கிலேயே இந்த குழுவினர் விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

January 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகிறது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்ரேலில் கைதான 43 வயது இலங்கையர்

January 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜோர்டான் எல்லை ஊடாக சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை ஒருவர் இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை மற்றும் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட ஒருவரை சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வில்பத்து தேசிய பூங்காவில் கூடாரம் அமைத்து விலங்கு வேட்டை

January 20th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வில்பத்து தேசிய பூங்காவில் கூடாரங்களை அமைத்து, காட்டு விலங்குகளைக் கொன்று பாரிய மோசடி ஒன்று முன்னெடுக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிரீன்லாந்தை பாதுகாக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

January 20th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிறீன்லாந்தை நிர்வகிப்பதற்குத் தான் விடுக்கும் கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 100 வீத வரியை (Tariff) விதிக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி

January 20th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19) உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இ.போ.ச பேருந்து விபத்து வழக்கு : சாரதிக்கு ஒரு ஆண்டு கடூழியச் சிறை

January 20th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து சாரதியொருவருக்கு நீதிமன்றம் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button