அரசியலமைப்புக்கு அமைய ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும் நம்பகமான முறையிலும் இயங்கும் : ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் விஜித்த ஹேரத்

February 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

.

சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அறிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடின்றி முற்றாக நீக்கவேண்டும்: அதுவே ஊடகவியலாளர் பாரதிக்கான அஞ்சலி அரசியல்வாதிகள் பலரும் சுட்டிக்காட்டு

February 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். அதேவேளை அச்சட்டத்தினை பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்குவது மிகமிக அவசியமாகும் என பயங்கரவாதச்சட்ட ஒழிப்பை நீண்டகாலமாகக் கோரிவரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோகணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டம்

February 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காட்டு போலி​யோ வைரஸ் பதிவானதைத் தொடர்ந்து போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டத்தை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

February 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மகா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன், தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நெடுந்தீவில் உழவு இயந்திர விபத்து இளம் குடும்பஸத்தர் பலி

February 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நெடுந்தீவில் நேற்று இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒடிசாவில் பாரிய நிலநடுக்கம்

February 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒடிசாவின் பூரி அருகே வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6:10 மணிக்கு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது கொல்கத்தாவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் கைது

February 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெருமதிமிக்க குஷ் கஞ்சாவுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது 

February 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திங்கட்கிழமை (24) 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெருமதிமிக்க குஷ் கஞ்சாவுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை : அமைச்சர் ஆனந்த விஜேபால

February 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கலந்துரையாடப்பட்டதுடன், தேவையான பாதுகாப்பை வழங்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் உறுப்பினர்களுக்குக் காணப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தற்போது ஆராய்ந்து இறுதி அறிக்கைகளைத் தயாரித்து வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் : உயர்ஸ்தானிகரின் தொடக்க உரையில் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படவில்லை

February 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (22) ஆரம்பமான நிலையில், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் தொடக்க உரையில் இலங்கை குறித்து விசேடமாக எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசியல் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்கள் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற சுலோகத்தை தற்போது கையிலெடுத்துள்ளார்கள் : டி.பி சரத்

February 24th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசியல் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்கள் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற சுலோகத்தை தற்போது கையிலெடுத்துள்ளார்கள். கடந்த அரசாங்கங்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு பாதாளக் குழுக்களை போசித்தார்கள். எமது அரசாங்கத்தில் பாதாளக் குழுக்களின் செயற்பாடு இல்லாதொழிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி சரத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பல்பொருள் அங்காடியில் திருட்டு ; உப பொலிஸ் பரிசோதகர் கைது : கண்டியில் சம்பவம்

February 24th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிபத்கும்புர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடியதாகக் கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாதுகாப்புப் படைகளிலிலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாகக் கைதுசெய்ய உத்தரவு : பாதுகாப்புச் செயலாளர்

February 24th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜைகள் மீட்பு

February 24th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை : சிறுநீரகம் செயலிழந்திருக்கலாம் என அச்சம்

February 24th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்தும் ஆபத்தான நிலையிலேயே உள்ளார் என தெரிவித்துள்ள வத்திக்கான் குருதிபரிசோதனைகளின் போது அவரது சிறுநீரகம் செயல் இழந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள்தென்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button