புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகம்; முறையான விசாரணைகளின் பின் உண்மை பகிரங்கப்படுத்தப்படும் : சுனில் வட்டகல

February 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் பின்னணியின் உண்மை பகிரங்கப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீதிமன்றில் நீதிபதி முன்னிலையில் சந்தேக நபர் சுட்டுக்கொலை : நீதியமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்:ஹெக்டர் அப்புஹாமி

February 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். நீதியமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும். இவர்கள் வாய்ச்சொல் வீரர்கள் மாத்திரமே என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை

February 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான்கு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை

February 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை : சாமர சம்பத்

February 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவு பகுதியில் பாலம் நிர்மாணிப்புக்கு 1000 மில்லியன் ரூபாவும் என்ற அடிப்படையில் 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களுக்கும் அபிவிருத்திக்கு சமமான வகையில் நிதி ஒதுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் : பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

February 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு தந்தையும் மகளும் பலி

February 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மித்தெனிய பொலிஸ் பிரிவின் கடேவத்த சந்தியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் அவரது ஆறு வயது மகளும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி கட்டுநாயக்கவில் கைது

February 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாண் விலை குறைப்பு

February 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால் குறைப்பதுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின் தடை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தீர்வு

February 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக ஏற்பட்ட மின் தடை மற்றும் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான குறுகியகால மற்றும் நீண்ட கால தீர்வுகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது : ரவி கருணாநாயக்க

February 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என்பது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தல் : நாமல் ராஜபக்ஷ

February 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடு அரசாங்கத்துக்கு அழகல்ல, தேர்தலை பிற்போடும் பாவச்செயலுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்களும் உள்ளோம். இருப்பினும் தேர்தல் நடவடிக்கைகள் சாதாரண தர பரீட்சைக்கு இடையூறாக அமைய கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழர் பகுதியில் கோர விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி மற்றொருவர் காயம்

February 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று (17.2.2025) மாலை வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த நிமல் வயது 35 என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் : 18 பேர் படுகாயம்

February 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடா – டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரையறுக்கப்பட்ட வரி நிதியை விவேகமாகவும் பொறுப்புடனும் நிர்வகிப்பதே எங்கள் நோக்கம்:ஜனாதிபதி

February 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜூலை முதல் மூத்த குடிமக்கள் வட்டி மானியத்துக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நிவாரணத் தொகையை உயர்த்தியுள்ளோம் என் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button