ஒரு தமிழ் பெயருடன் உளவுத்துறையின் உச்சாணிக் கிளையில் இருந்த சுரேஷ் சல்லே

February 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மர்மமான ஒரு பெயராக அறியப்படும் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சல்லே, 2019-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புச் சதித் தொடர்பாக நேற்று (பிப்ரவரி 25, 2026) அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சுமார் 270-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட அந்தப் பயங்கரமான நாளில், பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறையின் தோல்விகள் குறித்துப் பல கேள்விகள் எழுந்தன. தற்போது அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் வாக்குறுதியின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கையை (arrest operation) மேற்கொண்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்த டொலர் பிணைமுறிகள்

February 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டில் டொலர் பிணைமுறிகளை வெளியிடுவதற்கும், ஏற்றுமதி வருமானம் மீளமைத்தல் விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் வர்த்தக வங்கிகள் வசமுள்ள டொலர் கையிருப்பை அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவதுடன், நாட்டின் நிதி நிலைத்தன்மையை பேணவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாமலின் கருத்துக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்

February 26th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்‌ஷ தெரிவித்த கருத்துக்கு, சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆய்வாளர் ருவன்பத்திரன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜெப்ரி எப்ஸ்டீனின் ரகசியத் திட்டம்: மொராக்கோவில் அரண்மனை வாங்க வங்கிக் கணக்கில் நடந்த மர்மப் பரிவர்த்தனைகள்

February 25th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக 2019-ல் கைது செய்யப்படுவதற்குச் சரியாக 10 நாட்களுக்கு முன்பு, மொராக்கோவின் மராகேஷ் (Marrakesh) நகரில் ஒரு சொகுசு அரண்மனையை வாங்க ஜெப்ரி எப்ஸ்டீன் தீவிர முயற்சி செய்துள்ளார். இதற்காக ‘சார்லஸ் ஸ்வாப்’ (Charles Schwab) நிதி நிறுவனம் மூலம் சுமார் 27.7 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 230 கோடி ரூபாய்) பணத்தை மொராக்கோவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் முகவருக்கு எப்ஸ்டீன் பரிமாற்றம் செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேர்தல் நடத்தப்பட்டால், எமது ஒற்றுமையின் பலத்தை பார்க்க முடியும்:சுஜித் சஞ்சய பெரேரா

February 25th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணிலேயே நாம் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவோம். மாகாணசபைத் தேர்தலிலிருந்தே எமது ஒருமித்த பயணம் ஆரம்பமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று முதல் மின் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்

February 25th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (25) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார நுகர்வோருக்கு மார்ச் 18 ஆம் திகதி வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் இன்றைய வானிலை பற்றிய முன் அறிவிப்பு

February 25th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை

February 25th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியக் கடற்படையின் பலம் கூடுகிறது: மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ‘ஐஎன்எஸ் அரிதமன்’ தயார்

February 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் அணுசக்தி முப்படைத் திறனை (Nuclear Triad) அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ‘ஐஎன்எஸ் அரிதமன்’ (INS Aridhaman) வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் மையத்தில் (SBC) ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், தற்போது இறுதிக்கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்காவின் நிபந்தனைகளை நிராகரிக்கும் ஈரான்

February 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான அணுசக்தி நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்து வருகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முழுமையாக முடக்குவது மற்றும் ஏவுகணைத் திறன்களைக் குறைப்பது போன்ற அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்பது, ஈரானியக் குடியரசின் இறையாண்மைக்கும் அதன் சித்தாந்தத்திற்கும் விடப்படும் சவாலாக அந்நாட்டு ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். போரின் மூலம் ஏற்படும் இழப்புகளை விட, அமெரிக்காவிடம் அடிபணிவது தங்களது ஆட்சி அதிகாரத்திற்குப் பெரிய அச்சுறுத்தலாக முடியும் என்பதே ஈரானிய மேலிடத்தின் தற்போதைய கணக்காக உள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விடுதி உரிமையாளரின் மகளின் மோசமான செயல் இரகசிய கெமராவால் சிக்கிய காட்சி

February 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி – பில்லகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்குச் சொந்தமான 620,000 ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், அந்த விடுதி உரிமையாளரின் மகளை உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் வர்த்தக நிலையத்தினுள் கத்திக்குத்து மூதாட்டி படுகாயம் மற்றொரு பெண் கைது

February 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா – உக்குளாங்குளத்தில் பெண் ஒருவர் மீது பிறிதொரு பெண் கத்தியால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவமானது வவுனியா, பண்டாரிக்குளம், முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹைலெவல் வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி, மேலும் ஒருவர் கவலைக்கிடம்

February 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இன்று (24) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

February 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்

February 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button