சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மதத் தலைவர்கள் கோரிக்கை
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மதத் தலைவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயுதக் கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சரத் பொன் சேகாவிற்கு 30 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா விவகாரத்தில் தவறு இழைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தவறை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோலமுன சோமவன்ச தேரர், பெட்ரிக் பெர்னாண்டோ பிதா, மௌவி அல் ஹாஜ் ஹசன் காசீம் மற்றும் விக்னேஷ்வர் சர்மா ஆகிய மதத் தலைவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply