“தமிழகத்தில் புலிகள் முகாம் இல்லை”
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இயங்கிவருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ரகசிய பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன நாடாளுமன்றத்தில் புதன் கிழமையன்று தெரிவித்திருந்தார்.
இலங்கையில் போரை உருவாக்கவும், இந்தியத் தலைவர்களைக் கொல்லவும் தமிழகத்தில் பயிற்சி முகாம்களை நிறுவப்பட்டுள்ளதாக ஜயரத்ன குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் அவரது புகார்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என தமிழக டிஜிபி லத்திகா சரண் சென்னையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் குறித்து தமிழக போலீசின் புலனாய்வுத் துறை விழிப்புடன் கண்காணித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடலோர பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என லத்திகா சரண் குறிப்பிட்டிருக்கிறார்.
அண்மையில் சென்னையில் புத்த மையம் ஒன்று தாக்கப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்றவகையில் ஜயரதன் கூறியிருந்தார். அதுவும் தவறான தகவல், தாக்குதலை நட்த்தியது இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள், விடுதலைப் புலிகள் அல்ல என லத்திகா சரண் மேலும் கூறியிருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply