மன்னாரில் மேலும் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம்

மன்னார் வளைகுடாவில் மேலும் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பெற்றோலிய வள செயலகம் தீர்மானித்துள்ளது.

தற்போது மன்னார் வளை குடாவில் இரண்டாம் கட்ட எண்ணெய் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய நிறுவனமொன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த இடத்தில் எண்ணெய் கிணறுகளில் வாயு தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

வர்த்தக ரீதியில் இதனைப் பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து கண்டறிவதே புதிய எண்ணெய் கிணற்றின் அகழ்வின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாக பெற்றோலிய வள செயலகம் தெரிவிக்கின்றது.

இதேவேளை மன்னார் வளைகுடா பகுதியில் மேலும் எண்ணெய் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply