வடக்கில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 100 இடங்கள் வர்த்தமானியில்

வடமாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 100 இடங்களை புதிதாக வர்த்தமானியில் அறிவிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து குறித்த இடங்கள் இனங்காணப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சி பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் தொல்பொருள் அமைந்துள்ள இடங்களை இனங்காண்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதுவரை தொல்பொருள் முக்கியத்தும் வாய்ந்த 200 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply