கே.பி.க்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லை – அரசாங்கம்

அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் குமரன் பத்மநாதன், சுயமாக செயற்படும் உரிமை கொண்டவர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளியாக செயற்பட்ட குமரன் பத்மநாதன், மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்.

எனினும் அவர் சுதந்திரமாக நடமாடி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல குமரன் பத்மநாதன் சுயமாக இயங்குவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதால், அவரை அரசாங்கம் தடுத்து வைக்கவில்லை என்றும், அவர் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் லக்ஸ்மன் ஹுலுகல்ல குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply