யாழில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் மோசடி

யாழ்ப்பாணம் அராலி வீதியிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் மோசடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட முஸ்லிம்களின் காணிகள் காணியினது உரிமையற்றவர்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே காணி உரிமையாளர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்துக்கு வந்து தமது காணி தொடர்பில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காணிகள் கொள்வனவு செய்பவர்களும் போலிக்காணி உறுதிப்பத்திரங்களுக்கு ஏமாந்து விடாது உறுதிப்பத்திரங்களை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply